Thursday, April 5, 2012

பேரிச்சம் பழம்

இந்த கதையில் வரும் அனைத்து சம்பவங்களும் முண்டகண் ஈஸ்வரி மீது ஆணையாக உண்மை, சத்யம்!


Location : வேற எங்க? நாலு வருஷமும் விட்டத்த பார்த்தே கழிச்ச hostel தான்.

காட்சியின் பிழைகள் :
"Fast  bowler"  மகாதீர் முகமது,
2. "கஷ்டப்பட்டு படிக்கிற Dote student"  மகேந்திரன் 
&
லேடீஸ் & gentlemen , let  மீ introduce ,
3. "ஜிங்கம்" (இவரு தான், இந்த story -ஓட ஹீரோ, சத்தியமா நான் இல்லீங்க)


மகாதீர், துபாய் குறுக்கு சந்துல இருந்து பேரிச்சம் பழம் வாங்கிட்டு வந்து இருந்தாரு. இங்க, பேரிச்சம் பழத்த "zoom" பண்ணி பார்த்தா ஒரு உண்மை தெரியும். அதாவது, அந்த பேரிச்சம் பழத்துல, பேரிச்சம் பழ கொட்டைக்கு பதிலா பாதாம் கொட்டை இருக்கும். ரொம்ப நல்லா இருக்கும். அது தான் அதோட speciality .


மகாதீர் and மகேந்திரன், பாதாம் போட்ட பேரிச்சம் பழத்த ருசிச்சி கிட்டு இருந்தப்போ தான், நம்ம ஜிங்கம் ஒரு செம bgm -ஓட entry ஆகுது! :)

ஜிங்கம் : ஏலே மக்கா, என்ன டா சாப்பிடறீங்க ?

மகாதீர்  : பேரிச்சம் பழம்  எடுத்துக்கோ மச்சி !

ஜிங்கம் :  கொஞ்சம் விட்டு இருந்தா, காலி பண்ணி இருப்பீக போலவே?

மகாதீர்  : உனக்கு குடுக்காம சாப்பிட முடியுமா? நீங்க எல்லாம் எவ்ளோ பெரிய ஆளு ?

ஜிங்கம் :தெரிஞ்சா சரி தான்.

ஜிங்கம் இப்போ கொஞ்சம்  பேரிச்சம் பழத்த முரட்டு தனமா மென்னு கிட்டு இருக்கு. ஜிங்கம் வாய்க்கு இப்போ அந்த பாதாம் கொட்டை தட்டு படுது !

Dote  Student  மகேந்திரன் : (குறும்பா)  டேய், அதா முழிங்கிட போற !

ஜிங்கம் விடுமா? எவ்ளோ sharp !, ஜிங்கம், அத பேரிச்சம் பழ கொட்டை னு நெனைச்சி அந்த கொட்டையை வேகமா துப்பி பத்திரமா கையில வச்சிகிச்சு !

 ஜிங்கம் : முழிங்கிடுவோமா நாங்க எல்லாம் ? சின்ன பிள்ளை-ல இருந்தே நான் வெவரம்-னு எங்க ஆத்தா சொல்லும்டா! எப்புடி !


மகாதீரும் மகேந்திரனும் விழுந்து விழுந்து சிரிச்சத பார்த்து, ஜிங்கம் என்ன நடக்குது னு புரியாம முழிச்சி கிட்டு கர்ஜித்தது !

மகாதீர்  : டேய், அது பாதாம் டா, வாய்ல போட்டு சாப்டு டா !

ஜிங்கம் முறைச்சி கிட்டே அத மென்னு பார்த்தப்ப தான் சிங்கத்துக்கு உண்மை  தெரிஞ்சுது, அது உண்மையிலயே பாதாம்னு !

வெறி கொண்ட சிங்கம் தன்னை ஏமாற்றிய மகேந்திரனை முறைத்து விட்டு , எப்படியும் சந்தர்பம் கெடைக்கும் போது பழி தீர்க்கும் முடிவுடன்,  ஓர வாய் சிரிப்புடன் வெளி ஏறியது !

வெளியே சென்ற  சிங்கத்துக்கு சட்டென்று ஒரு சிந்தனை ! Shoaib அக்தர் -அ விட வேகமா ரூமுக்குள்ள வந்தது !

Dear Readers of  this  post ,  இப்போ, இந்த அடி பட்ட சிங்கம் எப்படி மகேந்திரனை பழி வாங்குச்சுனு பார்க்க போறோம். So , எல்லாரும் கொஞ்சம் மனச திட படுத்திக்கோங்க!

உள்ள வந்த சிங்கம்  மகாதீரையும் மகேந்திரனையும் முறைத்து பார்த்து
 முறுக்குன்னு மூக்க புடுங்கிக்கிற மாதிரி சட்டென்று கேட்டது ஒரு  கேள்வி! ஆனா, கொஞ்ச பாவ பட்ட, ஏக்கம் கொண்ட தோரணையில்,

"ஏலே மக்கா, பேரிச்சம் பழகொட்டை தான், பாதாமாடா ? இது தெரியாம சின்ன வயசுல இருந்து நெறைய தடவ தெரியாம கீழ துப்பிட்டேனே டா ? "



மகாதீரும் மகேந்திரனும் இப்போ அத விட அதிகமா சிரிச்சப்போ, சிங்கத்துக்கு இன்னும் conpeesion அதிகம் ஆச்சே தவிர உண்மை புரியலீங்கோ!


வாழ்க சிங்கம்! வளர்க பேரிச்சம் பழகொட்டை !