Thursday, September 4, 2008

புல்லாங்குழல்


மூங்கில் கம்புகள் துளையிடப்பட்டு, அழகாய் அது ஒரு ஓசை தருகையில் புல்லாங்குழல் ஆகிறது.

இந்த புல்லாங்குழல் வட இந்தியாவில் 'பன்சாரி' என் அழைக்கப்படுகிறது.

புல்லாங்குழல், கிருஷ்ண பகவானால் வாசிக்கப்பட்டதே அதன் முதல் சரித்திரக் கூறு.

புல்லாங்குழலுக்கும் மனிதனுக்கும் ஒரு அழகிய ஒற்றுமை உள்ளது.
புல்லாங்குழலுக்கும் 7 துளைகள். மனிதனின் உடலிலும் 7 துளைகள்.

நம் தமிழ் மொழி எனும் இசை அமைப்பாளரால் இந்த குழல் எவ்வளவு அழகாக வாசிக்கப் பட்டுள்ளது நினைத்தேன். அந்த சுவையை இங்கே பகிர்கிறேன்.

பெரும்பாலான பாடல்கள் கண்ணபிரானை நோக்கியே பாடப் பெற்று உள்ளன.

அவற்றுள் சில :
--------- ---
1. புல்லாங்குழல் குடுத்த மூங்கில்கலே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்.

2. அவன் வாய் குழலில் அழகாக, அமுதம் ததும்பும் இசையாக.
- பாடல் - காற்றில் வரும் கீதமே
படம் - ஒரு நாள் ஒரு கனவு


மற்ற உவமைகள்:
---- ------------
1. என் மூச்சில் வாழ்கின்ற புல்லாங்குழல்
பாடல்: கற்பூர் பொம்மை ஒன்று
படம்: கேளடி கணமணி
இந்த பாடலை ஒரு சிசுவை சுமக்கும் ஒரு கர்பிணிப் பெண் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல் இது.
புல்லாங்குழலின் ஒரு துளை வழியே அனுப்பபடும் காற்றால், அது இயக்கப்படுகிறது.
கருவில் வளரும் ஒரு சிசுவும் அப்படித்தானே. சிசுவை குழலாய் உருவகப்படுத்தி, தாயின் சுவாசம், குழலை இயக்கும் காற்றாய், அந்த சிசுவை இயக்குகிறது, இயங்க வைக்கிறது!


2.ஊதாத புல்லங்குழல் ,எனது அழக சூடாத பூவின் மடல்.
பாடல் : அழகு மலர் ஆட, அபி நயங்கள் கூட
படம் : வைதேகி காத்திருந்தாள்

இந்த பாடல் ஒரு இளம் விதவை தன் விரக தாபத்தின் விளைவாய் பாடும் பாடல்.
இந்த பாடலில் "பூங்காற்று மெதுவாகப் பட்டாலும் போதும். என் மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது" என்றெல்லாம் அந்த பெண் பாடுவதாய் இந்த பாடலின் வரிகள் அமைக்கபெற்று இருக்கும். இங்கே, பெண் தன்னை குழலாய் உருவகம் செய்து கொண்டு, தான் வாசிக்கபடாமல் இருப்பதைத் தான் "ஊதாத புல்லாங்குழல்" என்று கூறுகிறாள்.

3. அந்த குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கு இல்லையே!
பாடல் : அலைபாயுதே
படம் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இந்த பாடல் முழுக்க முழுக்க குழலை மையமாகக் கொண்டு பாடப் பெற்ற பாடல்.
இந்த பாடலில் இருட்டில் இருந்து ஒருவன் புல்லாங்குழல் வாசிப்பது போலவும், அதை ரசித்து அந்த இசைக்கு மயங்கி நிற்கும் ஒரு பதுமை பாடுவது போல் அமைக்கப் பெற்றுள்ளது. கதா நாயகனை பிரிந்து இருக்கும் கதா நாயகி பாடும் பாடல் இது. இந்த பாடலில்
"புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி! உள்ளே இருக்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி" என்று ஒரு வரி உள்ளது. அந்த பாடலில், புல்லாங்குழலில் ஒரு சோகமான ராகம் வாசிக்கப்படுவதாகவும், அந்த சோகத்தில் பாடும் பெண்ணுக்கும் குழலுக்கும் சரி பாதி சோகம் என்று கூறுகிறாள்.

சோக ராகம் வாசிப்பதற்கு புல்லாங்குழலுக்கு 7 கண்கள் உள்ளனவாம். இந்த பெண்ணுக்கு 2 கண்கள் தான் உள்ளனவாம். அதற்கு தான் "அந்த குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கு இல்லையே!" என்று பாடுகிறாள்.

Tuesday, September 2, 2008

கண்ணாடிக் கல்வெட்டுகள்- காவல் மரம்



கதைச்சுருக்கம்:

18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற சம்பவம்.

ஆனைமலைப் பகுதி - பொள்ளாச்சிக்கு அருகே மலை சார்ந்த இடம்.


அந்த நகரத்தின் பெயர் - கொன்காணம்.
கொன்காண மன்னன் - நன்னன்.

அவன் உயிருனும் மேலாய் வணங்குவது - ஆழியாற்றங்கரையோரம் இருந்த காவல் மரம். அதற்கென்று காவலாளிகள் எல்லாம் வைத்து சர்வ மரியாதையுடன் அதை வணங்கி வந்தான். மக்களும் அவ்வாறே வணங்கி வந்தனர்.

ஊரில் மிகப்பெரிய வாணிபர், மாமூலனார். அவரின் மகள் நங்கை.

அவள் ஒரு நாள் ஆற்றில் குளித்து விட்டு வருகையில், யதார்த்தமாய் காவல் மரத்தில் இருந்து வந்து விழுந்த பழம் என்று அறியாமல் பழத்தை சுவைத்து விட்டாள். அதை காவலாளிகள் மன்னனிடம் கூற, நங்கைக்கு மரண தண்டனை விதிக்கிறான் மன்னன். நங்கையின் தலை துண்டிக்கப்படுகிறது.மன்னனின் தவறான தீர்ப்பை எதிர்த்தும் நங்கைக்கு இழைக்கப்பட்ட அ நீதிக்காகவும், மக்கள் கொதித்து எழுகின்றனர். புரட்சி வெடித்து மன்னன் மகுடம் இழக்கிறான்.

தற்சமயம் அந்த சரித்திர தடத்தின் சரித்திரம் :

இப்போது அது கேரளம். அந்த பகுதியின் பெயர் "பிங்கொனாம் பாறா".

பிங்கொனாம் பாறா என்றால் பெண்ணைக் கொலை செய்த பாறை என்று பொருள்.

மாங்கனி தின்று தண்டனைக்கு உள்ளானதால்," மாங்கனியம்மன்" என்றாகி, பின் காலப்போக்கில் "மாசாணியம்மன்" என்று மக்களுக்குள் தோன்றி விட்டாள்.
இவ்வாறு முடிகிறது அந்த சரித்திர நிகழ்வின் விவரிப்பு.

இதற்கிடையில், இந்த கதைக்காக கதையுடன் சேர்த்து கவிதையும் புனையப்பட்டு உள்ளது.

அந்த காலத்தை வர்ணிக்கும் பொழுது,

"தமிழகத்தின் வயல்களில் நெல்லுக்கு
பதிலாய் முத்து விளைந்த காலம்

இமயம், தமிழகத்திற்கு
இடுப்பளவு இருந்த இறுமாப்பான காலம்"

என்று கூறுகிறார்.

ஆனைமலைப் பகுதியை விவரிக்கையில்,

"அருவிக் கூ ந்தல் அவிழ்த்துப் போட்டு சிக்கெடுக்கும் சிகரங்கள்
பச்சை சட்டை தைத்து போட்டு படுத்து கிடக்கும் புல் நிலம்."

என்று கூறுகிறார்.


தாயில்லாத நங்கை இயற்கையின் அரவணைப்பில் வளர்கிறாள்.
இதை வர்ணிக்க,

"இயற்கையாகவே சில உறவுகள் அமைவதுண்டு. இயற்கையே உறவாகவும் அமைவது உண்டு.
தாயில்லாத இந்தத் தட்டாம் பூச்சிச் சிறகுக்கு காற்றும் மரமும் நிலவுமே அம்மா!"

என்று கூறுகிறார்.

நங்கை சிறையில் அடைக்கப் பெறும் போது,

"குற்றவாளிகளைக் குறைப்பதற்காக சில நேரங்களில் சிறைச்சாலைகள் உருவாக்கப்படுகின்றன!
சிறைச்சாலைகளை நிரப்புவதற்காக சில சமயங்களில் குற்றவாளிகள் உருவாக்கப்படுவார்கள் !"
என்று கூறுகிறார்.

நங்கைக்கு மரண தண்டனை விதிக்கப்படுகையில், "பூப்பறித்த காற்றுக்கா சிரச்சேதம் ? மடல் விரித்த மல்லிகைக்கா மரண தன்டணை?
மடல் விரித்த மல்லிகைக்கா மரண தண்டனை?"

என்றும் கூறுகிறார்.