Monday, August 12, 2013

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்
"திருத்தி  எழுதிய தீர்ப்புகள்"  புத்தகத்தில்  இருந்து மிகவும் பிடித்த வரிகளை தொகுத்து உள்ளேன்  !

அந்தி 

ராத்திரி வரப்போகும்
ராச குமாரிக்கு
மேற்கு அம்மியிலே
மஞ்சள் அரைப்பது யார்?

பாரதி 

அவன் அதிசயம் செய்தான்!
தமிழின்  அத்தனை எழுத்தையும்
ஆயுத எழுத்தாய் அல்லவா மாற்றினான் ?
ஆதிக்க வேரறுக்கும்
ஆயுத எழுத்தாய் ...

மகாத்மா 

அப்படியொன்றும் உன்னை
அடியோடு மறக்கவில்லை
அண்ணலே !
இன்னும்
நகரத்துப் பெண்களிடம்
நல்ல செல்வாக்கு இருக்கிறது !

உன்னைப் பின்பற்றி
அரையாடை கட்டுவது
அவர்கள்தாம் இப்போது!


நட்சத்திரங்கள் 

நிலவு என்னும்
ஒற்றை வாக்கியத்தை
எழுதி முடித்த
எக்காளத்தில்....
எவனவன்
இத்தனை முற்றுப்புள்ளிகள்
இட்டு வைத்தவன் ?

"இந்த பூக்களைப்
பறிக்காதீர்கள்"
என்று
நிலாப்பலகையில்
எழுதி வைத்த
எச்சரிக்கை எழுத்துக்கள்
மேகச் சிராய்ப்பில்
அழிந்து போயினவோ?

அப்படி
அழித்து அழித்தும்
அழியாத அழுக்கே
அந்தக்
களங்கமோ?

மன்னிப்பு பரிகாரமல்ல

நீதான் கர்த்தனே
நீ தான் !

பாவிகளை ரட்சிப்பதாய்
பாவத்திற்கு நீ தானே
பரிந்துரை செய்தாய் ?


இயற்கையோடு இயைந்த வாழ்வு 

பிறை நிலா.

மகன் கேட்டான் :

"ஏம்ப்பா நிலா
சூம்பிப் போச்சு ?"

தகப்பன் சிரித்தான் :

"அதுக்கும் நம்மைபோல்
மாசக் கடைசியோ
என்னவோ மகனே !"

இயற்கையோடு இயைந்த வாழ்வு
என்பது இதுதானோ ?
எந்தமிழர் சொன்னதும்
சரிதானோ ?


கணக்குப் பார்கையில் 

இந்திய மண்ணில் ,

வியாபாரம் செய்ய வந்தவர்கள்
அரசியல் நடத்தினார்கள் !

அரசியல் நடத்த வந்தவர்கள்
வியாபாரம் செய்கிறார்கள் !


ராத்திரி விழிக்கட்டும் 


சித்தத்தினால் 
          கொண்ட 
பித்தத்தினால் 
           கனவு
முத்தத்தினால் 
          வந்த  
சத்தத்தினால் 

     தூக்கம் கலைந்ததடி தோழி  - செத்த    
     சூரியன் உதிப்பதெந்த நாழி?


ஏக்கம் வரும் 
         நெஞ்சில் 
வீக்கம் வரும்  
          பருவ 
நோக்கம் வரும் 
          எங்கு 
தூக்கம் வரும் ?

       கரைந்தது கன்னத்து மச்சம் - நான் 
       கன்னியாய்  இருப்பதே மிச்சம் !

பேர் கேட்டது 
       காதல் 
வேர்விட்டது 
        என்னை 
ஊர்சுட்டது 
        சாபம்
யார் இட்டது ?

       என்றுதான் ஜாதி உயிர் போகும் - இன்னும் 
       எத்தனை வருஷங்கள்  ஆகும் ?


பூவைப்பதா 
      பிறகு 
தீவைப்பதா 
      மனசு 
தேன் வைப்பதா 
     இல்லை 
சீழ் வைப்பதா ?

         ஒருமுறை தாய் வந்து பார்த்தாள்  - மழைக்கு 
          ஒழுகுதோ வீடென்று கேட்டாள் !


சாதிப்படி 
     பெற்ற 
பாதிப்படி 
     காதல் 
நீதிப்படி 
     துன்பம் 
எதுக்கடி ?

      விடிந்தால் தீர்ந்து விடும் வழக்கு - எங்கே   
        வெளுக்கிறதோ பார் அந்தக் கிழக்கு !









Thursday, June 13, 2013

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா !

இப்படி ஆரம்பிப்போம் !

2nd year படிக்கும் (???) போது, எங்க class-ல ஒரு பெரிய அதிரடி  gang  form ஆச்சு .

அந்த சங்கத்தோட பேரு - VVS -BBB

vvs - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
BBB - Back bench boys.

பேரே இவ்ளோ கேவலமா இருக்கு-னு பார்த்தா , அந்த சங்கத்தோட members அத விட கேவலமானவங்க !

முரளி , சுமன் , பத்து, வேணு , ஸ்ரீராம் + நான் !!!

அந்த சங்கத்தோட speciality என்னன்னா - என்னை தவிர மீதி எல்லாருக்கும் ஒரு பதவி. நான் மட்டும்  தான் உறுப்பினர்.

"இன்னிக்கி இருந்து நம்ம அடாவடி பண்றோம் மச்சி ! எல்லா professor, class பொன்னுங்க எல்லாரயும் செம ஓட்டு ஓட்டுறோம் ! இது நம்ம வச்சி இருக்கிற arrear மேல சத்தியம் "  - அப்டின்னு உறுதி மொழி எடுத்தோம்.

Monday  morning. first  period.

ஏதோ ஒரு subject. term டெஸ்ட் paper  correction பண்ணி குடுத்து எங்க சங்கத்த அசிங்க படுத்தினாங்க.

அந்த lecturer சும்மா இல்லாம, first mark வாங்கின பொன்-ஐ கூப்பிட்டு அந்த டெஸ்ட்-ல கேட்டு இருந்த sum -அ board-ல  solve பண்ண சொன்னாங்க .

சங்கம் கூடுச்சு.

"இப்ப அந்த பொன்ன கலாய்கிறோம் மச்சி ! "

"என்ன பண்ணலாம்"

ஏகப்பட்ட ideas. கடைசியா ஒரு முடிவுக்கு வந்தோம்.

சங்கத்தோட தலைவர் சொன்னார் - "செம்மையா கை தட்டி அசிங்கப்படுதுவோம்"

"super மச்சி. பின்றோம் "
(எவ்ளோ ஒரு கேவலமான  முடிவு. இதுக்கு பேரு அசிங்க படுத்துருதது வேற ? இதுக்கு பேரு கலாய்கிறது வேற? )

sum , board -ல solve ஆகி கிட்டு இருந்துச்சு.

சங்கம் , ஒரு பக்கம் "துடிக்குது புஜம், ஜெய்ப்பது நிஜம் " நு கைய்ய clap பண்ற position -ல வச்சி இருக்கு.

"ஓகே team . shoot " - அப்டின்னு ஒரு command.

நான் full tempo -ல கை தட்டி கிட்டு இருக்கேன் . ஆனா , சத்தம் பெருசா கேக்கல.

என்ன-நு பார்த்தா ,
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
நான் மட்டும் தான் கை தட்டி இருக்கேன்.

மத்த உறுப்பினர்கள் எல்லாம் , கைய்ய, தட்டுற position -ல இருந்து எடுத்துட்டு , ஒரு மாதிரி என்னை பார்த்து "என்ன மச்சி , இப்போ எதுக்கு கை தட்டின ? ஒரு படிக்கிற பையன் மாதிரி behave பண்ணுடா " நு வேற சொன்னானுங்க.

இது ஒரு பக்கம் -னா , இன்னொரு பக்கம் , lecturer -கு அருள் வந்துடுச்சு .

"who clapped ? who clapped ?" நு ஒரே சத்தம்.

Gang members, நான் approver ஆகணும் நு எதிர்பார்த்தாங்க.

எனக்கு என்ன பண்றதுநு புரியல. Lecturer -கு அருள் உச்சகட்டத்தை அடைஞ்சிருச்சி .

"இப்போ யாரு கை தட்டினது நு சொல்லலனா , this will be my last class in this semester."-நு செம்மயா சொல்லி கிட்டு இருக்காங்க.

"அது தானே எங்களுக்கு வேணும் "  நு வேற சங்கத்தில இருந்து ஒரு voice போயி , சிக்கலுக்கு விக்கல் வர்ற மாதிரி பண்ணிட்டாங்க .

அவ்ளோ தான், ஆத்தா ஏறி-fied  the மலை. class -அ விட்டு செம வேகமா வெளிய போயிட்டாங்க. Bell வேற அடிச்சிருச்சி .

சங்கம் சந்தோஷத்துல துள்ளி குதிக்குது.

எனக்கு இன்னும் கொஞ்ச விட்டா floor wet ஆகுற அளவுக்கு பயம்.  "டேய் . என்னடா பண்றது ?" - நு கேட்டேன்.

"என்ன பண்ணனும்? bell அடிச்சிருச்சி . lecturer வெளிய போயிட்டாங்க. பின்ன, class -கு உள்ளையேவா இருப்பாங்க ?" - சொல்லி , சங்கம் ஒருத்தனுக்கு ஒருத்தன் hi -five குடுக்குது.

அவ்ளோ தான் , hutch dog மாதிரி , அந்த lecturer பின்னாடி ஓடினேன்.

அங்க போனா , அத விட பெரிய இடி.

அந்த lecturer , உயிரை குடுத்து இந்த பிரச்சினைய எங்க class advisor  கிட்ட சொல்லி கிட்டு இருக்காங்க.

"ரைட் டா. சனியன் full effect காமிக்கிது."னு நெனைச்சிகிட்டேன்.

திடீர்னு , என் class advisor,  "என்ன  விவேக் ? உங்க class mates எல்லாம் சும்மா இருக்க மாட்டாங்களா ? நீயாவது எடுத்து சொல்லலாம்ல ?".

நான் அப்டியே , சுச்சா பாப்பா மாதிரி மூஞ்ச மாத்தி கிட்டு நின்னு கிட்டு இருந்தேன். அருள் வந்த lecturer கிளம்பி போயிட்டாங்க

"வா. நம்ம class -கு போலாம் ! யாரு  என்னனு கேட்டு உண்டு இல்லை நு பண்ணிடறேன்"-னு சொல்லி எங்க class advisor வேகமா நடக்க ஆரம்பிச்சாங்க .

Me  to  me : "அய்யய்யோ ! இப்போ தானே நல்ல பையன் மாதிரி நடிச்சி கோல்டன் globe அவார்ட் எல்லாம் வாங்குனோம். அதுக்குள்ள வேஷம் கலையுதே"

"ma'm,, maa'm" அப்டின்னு கூப்பிட்டேன் .

"என்ன ?" அப்டின்னு பார்த்துட்டு , "ஓஹோ ! நீ தான் அந்த culprit -ஆ ?. இதுக்கு உன்னை வேற மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண சொன்னேன் பாரு . என்னை சொல்லணும். போ , அவங்க கிட்ட சாரி கேட்டுட்டு வா " னு சொல்லி அனுப்பிட்டாங்க.

Again , hutch dog mode.

ஒரு வழியா , அந்த தெய்வத்தை மலை இறங்க வைக்கறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே. கொய்யால ! 10 arrear  clear பண்ற effort தேவைப்பட்டுச்சு.

சங்கத்துல போயி ஐக்கியம் ஆனேன்.  "மச்சி ! இந்த lecturer-அ கலாய்கிறோம்" - அப்டின்னு திரும்பவும் ஒரு குரல் !

Only உறுப்பினர்  to சங்கம் : "நான் Bombay -க்கு போயி operation பண்ணிக்கிட்டு மாதர் சங்கத்துல சேர்ந்தா கூட சேருவனே தவிர உங்க சங்கத்துல சேர மாட்டேன் டா".

இப்போ , read the title !



Friday, February 8, 2013

A brilliant 10th Standard Doctor

Year :2005
Location : Lifeline hospital, Chennai

Hostel  Dividing system-ல  அடுத்தவன் காசுல அளவுக்கு அதிகமா சாப்பிட்டனதால ,  அனைவரின் ஆசியுடன் Appendicitis operation இனிதே நடந்தேறியது.

Hospital -ல  நான், என் அப்பா, எல்லா  nurse -கூடயும்  கடலை போடுறதுக்கு  அருண்,  லேடி டாக்டர் கிட்ட மட்டும் பேசுறதுக்கு  கார்த்தி !

ஒரு nurse வந்தாங்க ! உடனே அருண் attend பண்ணினான் ! after ஆபரேஷன், வயிறு light-ஆ  pain  இருந்துட்டே இருந்தது. ஒரு மாதிரி  bulge  ஆன  மாதிரி இருந்துச்சு.

அருண் : Yes  மேடம், how may i help?

Nurse to me :  சார், operation முடிஞ்சி 4 hours ஆகுது ! Atleast once , piss பண்ணிட  சொல்லுங்க. அப்போ தான் கொஞ்சம் relief  ஆ இருக்கும். But , one கண்டிஷன், யாரையாவது கூட support-கு நிக்க சொல்லுங்க. ஏன்னா , கொஞ்சம் dizzy-ஆ ஆகிடும்.

அருண் : நோ problem மேடம் ! (pointing  me)அந்த body-அ  நாங்க  பார்த்துக்குறோம். உங்க வீடு எங்க இருக்கு ?

வழக்கம் போல அந்த nurse கண்டுக்கல. அசிங்கப்பட்டான்  அருண்குமார் !

அப்பா  சொன்னார் "போயிட்டு  வந்துடுபா ! அப்போ தான் relief ஆ  இருக்கும்."

 I went டு toilet. நோ success.(என்ன டா ? IAS exam-ஆ எழுத போன ? உச்சா  போக தானே டா  போன? இதுக்கு ஒரு success , failure  statement  ஆ ?)

Nurse came again and  asked "என்ன ? போயிட்டு வந்துட்டீங்களா ?" னு  thumbs up விளம்பரம் மாதிரி கைய வச்சி கிட்டு கேட்டாங்க.

அருண் : thumbs down - symbol  காமிச்சி - "இன்னும் இல்லீங்க ! வேற  என்ன பண்ணலாம் நு நீங்க suggest பண்றீங்க ?"

அப்போ அந்த nurse ஒரு ஐடியா குடுத்தாங்க. இத யாரவது embarrassing-ஆ feel பண்ணினா "I am really sorry".

Toilet-ல bucket -அ  move  பண்ணிட்டு , tap திறந்து விட்ருங்க . அந்த சத்தம் கேட்டாலே automatic-ஆ output வந்துடும். (இது என்ன COBOL ப்ரோக்ராம் ஆ ? Output -அ  கொண்டு வர்றதுக்கு ?)


போர்களத்திற்கு மீண்டும் சென்றேன். தோல்வியைத் தழுவி மீண்டும் returned to the pavilion.

பாட்ஷா படத்துல, ரஜினி ஆட்டோவை கிழிக்கும் போது , "வேண்டாம்" நு ஜனகராஜ், மத்த rowdy boys எல்லாம் தலை ஆட்டர மாதிரி reaction குடுத்து கிட்டே வெளிய வந்தேன்.

Nurse came again and  asked "என்ன ? Success ஆ ?"

எல்லாருக்கும் முன்னாடி அருண் replied  "Not yet. குழாய் வைத்தியம் வேலை செய்யல. வேற எதாவது வைத்தியம் சொல்லுங்க "

Nurse replied  "அய்யயோ , அப்டி இல்லைனா , pain அதிகம் ஆகிடும். போயிட்டு வந்துடுங்க"

எல்லா கடவுளையும்  வேண்டிகிட்டு திரும்ப  ரொம்ப try பண்ணினேன்.  வண்டி self எடுக்கல.

அப்போ , அங்க இருந்த ஒரு சீனியர் doctor ரொம்ப confident-ஆ  சொன்னாரு "இதெல்லாம் nothing to worry. All  due  to  stress. ஒரு tube போட்டு சின்னதா ஒரு injection கொடுத்தா simple -ஆ release ஆகிடும். ஒரு Rs.20,000 ஆகும் " நு சொன்னாரு.

Me : எவ்ளோ  சார் ??????

Doctor  : Rs. 20,000 rough -ஆ ஆகும்.

"சொல்லுங்க  சொல்லுங்க சொல்லுங்க !!! Bombay -ல , Bombay -ல , Bombay -ல , Bombay -ல "- நு ஒரு Locked room ல ரஜினிக்கு பாட்ஷா படத்துல கேக்குற மாதிரி எனக்கு  "எவ்ளோ  சார் ?, எவ்ளோ  சார் ? எவ்ளோ  சார் ? Rs. 20,000 rough Rs. 20,000 rough Rs. 20,000 rough" னு  கேட்டு  கிட்டே இருந்துச்சு.

"One  second sir" - நு சொல்லிட்டு I went again to toilet with full thrust. "He came, He saw, He conquered" மாதிரி successful -ஆ work -அ complete  பண்ணிட்டு வந்தேன். செம sense  of  relief.

"Yes , Yes  and  Yes " நு air-ல ஒரு punch vittutu வெளிய நான் வந்தத பார்த்துட்டு இருந்த அந்த doctor, என் friends கிட்ட ஏதோ சொல்ல, எல்லாரும் சிரிச்சாங்க.


அந்த டாக்டர் சொன்னாரு "அந்த Nurse எவ்ளோ டிப்ஸ் & tricks  சொன்னங்க ?? ஏதாவது work  out  ஆச்சா?. இவன் ஒரு வடி கட்டுன கஞ்ச பய நு தெரிஞ்சி கிட்டு  ஒரு Rs.20000 செலவு ஆகும் நு சும்மா இல்லாத treatment-அ சொன்னேன். அது எப்டி work  அவுட் ஆச்சு பார்த்தீங்க இல்ல?"

ஒரு சின்ன குழந்தையோட(நான் தான் the me  )  weakness-அ எல்லாருமா சேர்ந்து எப்டி exploit  பண்றாங்க நு பாருங்க மக்களே !

என்னை அசிங்கபடுத்தி output வாங்கின அந்த டாக்டர் வேற யாரும் இல்ல!  எங்க அப்பா  தான் ! அப்பா னா,  தவமாய் தவமிருந்து படத்துல வர்ற ராஜ் கிரண் மாதிரி சைக்கிள்-ல என்னை வச்சி ஓட்டனும். இப்படி கேலி கிண்டல் பண்ணி எல்லார் முன்னாடியும் ஓட்ட கூடாது .