Tuesday, June 5, 2018

ஒரு கோப்பைத் தேநீர் - குறும்பட நினைவுகள்

குறும்பட நினைவுகள்

எம் குழுவினர் எடுத்த சில குறும்படங்களின் சில காட்சிகளைக் காண்கையில் ஒரு சில காட்சிகளைப் படமாக்கிய விதம், ஓர் இனிய அனுபவமாய் நினைவில் இருக்கும்.

எமது நான்காம் படமான "காதல் எனும் முடிவிலியில்" பார்த்துக் கொண்டு இருக்கையில் ஒரு காட்சி.

கதாநாயகன் தேநீர் அருந்தும் காட்சி. 

ஒரு முகப்பில் இருந்து அந்த காட்சியை எடுக்க வேண்டும்.

ஒளிப்பதிவாளர் விமல், எந்த ஒரு காட்சியையும் கச்சிதமாக எடுக்க முற்படுபவர்.



கோப்பையில் தேநீரின் புகை தெரிய வேண்டும். அப்பொழுது தான் தத்ரூபமாக இருக்கும் என்று கூறி விட்டார்.


சமையல் அறையில் நீரை கொதிக்க வைத்து, கொண்டு வந்து ஊற்றினோம். புகை, கருவியில் தெரியவில்லை.

நண்பர் அருண், மிக அதிகமாக நீரை சூடேற்றி ஊற்றினார். அப்பொழுதும் புகை தெரியவில்லை.

நீர் சூடேற்றும் கருவியை முகப்புக்கு அருகில் வைத்து விட்டு,  நன்கு சூடேற்றி ஊற்றினார். அப்பொழுதும் தெரியவில்லை.


வேறு சில முயற்சிகளும் கை கொடுக்கவில்லை. நேரே பூசை அறை சென்றார். சாம்பிராணி எடுத்து வந்து கொளுத்தி விட்டார்.

கோப்பையை துடைத்து விட்டு, சாம்பிராணியை அதில் போட்டு விட்டார்.  "மூச்சை பிடித்துக் கொண்டு குடிப்பது போல் நடித்து விடு" என்று கிர்திக்கிடம் கூறினார். 

புகையைப் படம் பிடித்து ஆயிற்று.  அவ்வளவே! :)

அந்த காட்சி




4 comments:

  1. My favourite short film!! Sambrani - gud idea.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி. உம்மைப் போன்ற கலைஞர்கிளிடம் இருந்து பெரும் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது.

      Delete
  2. Replies
    1. இந்தத் தன்னடக்கம் தான் உங்களை எல்லோரும் "தயாரிப்பாளர் திலகம்" என்று கொண்டாடுகிறார்கள்.

      Delete