Monday, April 21, 2008

விமர்சனங்களைப் பற்றி கவிப்பேரரசு வைரமுத்துவின் கருத்து


How do you handle someone's opinion about you. You would have heard "n" number of proverbs, quotes,sayings etc.etc., but, with the richness of tamil language and with his elegant and simplistic style of writing, What this "Samrat" of tamil poets says about it is written below. This poem is cited from his book "தமிழுக்கு நிறம் உண்டு". I dont remember the exact lines. I dont have that book with me right now. But, I have somehow managed to requote it in the best possible manner.




நீ எதை செய்தாலும் இந்த உலகம் உன்னை எதாவது சொல்லி கொண்டே தான் இருக்கும்.
எல்லோர் வாயிலும் ஒற்றை நாக்கு.
உலகத்தின் வாயில் ரெட்டை நாக்கு.

எளிதாய் நானும் ஆடைகள் அணிந்தேன்.
வடுகப்பட்டி வழியுது என்றது.
அழகாய் நானும் சில ஆடைகள் அணிந்தேன்.
கழுதைக்கு எதற்கு கண்மை என்றது

சொந்த ஊரில் துளி நிலம் இல்லை
இவனா மண்ணின் மைந்தன் என்றது
தென்னை மரங்கள் சிலவும் வாங்கினேன்.
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது.

தேசிய விருதுகள் சிலவும் பெற்றேன்.
குருட்டு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுது என்றது
மீண்டும் விருதுகள் சில பெற்றேன்.
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது

பெண்களிடம் சற்று விலகி நின்றேன்.
புலவன் என்ற ஆணவம் என்றது
கண்களை நேராய் பார்த்து பேசினேன்.
புலவனின் கண்களை கவனி "காமம்" என்றது

இப்படி நீ எதை செய்தாலும் இந்த உலகம் உன்னை எதாவது சொல்லிக் கொண்டே தான் இருக்கும்.
இதற்கு இரண்டே வழிகள் தான் உள்ளன.

ஓன்று, உலகத்தின் வாயைத் தைத்திடு.
அல்லது, உன் செவிகளை மூடிடு.

உலகின் வாயைத் தைப்பது கடினம்.
உந்தன் செவிகளை மூடுதல் சுலபம்.

- கவிப்பேரரசு


இதே மாதிரி,முதல் மரியாதை படத்துல ஒரு சீன், சிவாஜிக்கும் ராதாவுக்கும் இருக்கிற உறவைப் பத்தி ஊர்ல எல்லாரும் தப்பா பேசுற மாதிரி ஒரு காட்சி.. அப்போ தான் "ராசாவே உன்னை நம்பி" அப்டிங்கிற பாட்டு வரும். அதுல ஒரு வரி..

"கலங்கம் வந்தால் என்ன பாரு,
அதுக்கும் நிலான்னு தான் பேரு"
ன்னு கவிப்பேரரசு எழுதி இருப்பார்.

அடுத்த முறை , உங்களை யாரேனும் விமர்சனம் செய்தால், அவர்களின் விமர்சனம் உங்களை பாதிக்காத வகையில் இந்த கவிதைகள் உங்கள் மனதை பண்படுத்தும் என்று நம்புகிறேன்.

மன்னிக்கவும். இந்த கவிதையை முழுமையாய் வழங்க முடியவில்லை என்பதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

அதே சமயம், இந்த கவிதை உங்கள் மனதில் ஒரு சின்ன நல்லுணர்வை ஏற்படுத்தி இரு ந்தால் அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து கொள்கிறேன்.



Whats Your Google PageRank?

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. ow... really amazing da..

    these quoted lines are simply outstanding and the most beautiful thing s u jus remembered lines & reproduced simply.. great..

    and thnkx for revealing kinda poems to which i have no idea abt.. interesting blog dedicated to tamil... gud luck...

    ReplyDelete
  4. Your message is too good.
    Thamizhin thanithuvathai potri parattum unakku oru thamizhachiyin nandrigal. Vinnulagum potrum thamizhukku, nee minnulagil silai vaithirukirai!!!
    Melum parpala karuthukkalai pagirnthu kol. Ennudaya vazhthukkal.

    ReplyDelete