Wednesday, April 16, 2008

சொல்லாததும் உண்மை - பிரகாஷ் ராஜ்


Here, I have Ctrl-C-ed and Ctrl-V-ed some of the excellent lines from the book சொல்லாததும் உண்மை by பிரகாஷ் ராஜ் . I am really dumbfounded by the way he thinks. The way he looks at things is really cool and different. Here are some of them.

1.ஒரு பிணம் என்னை கட ந்து போகுது. பாடையில படுத்து இருக்கிறவன் " வாடா மாப்ள வ ந்து ஆடுறியா? அப்பத்தானே உன் சாவுக்கு என் பேரன் வ ந்து ஆடுவான்" - அப்டினு கூப்பிடுர மாதிரி இருக்கு.

2.மரங்கள் மனிதனை கேட்டனவாம் " நாங்கள் 2000 ஆண்டுகளாக எத்தனை லட்சம் சிலுவைகளைத் த ந்து இருக்கிறோம். ஆனால், உங்களால் ஏன் ஒரு ஏசு கிறிச்துவைக்கூட தர முடியவில்லை" என்று

3.காதல் வெளிச்சத்திலயும் காமம் இருட்டிலயும் இருக்கிறது தான் வாழ்க்கையோட அழகு

4.வாய்ப்பு கிடைக்காததுனாலே தானே நாட்டில இன்னும் நெறைய பேரு நல்லவனா சுத்தி கிட்டு இருக்கானுங்க?

5. "ப்ரியம்" படம் ரிலீச் ஆன நேரம். poster-ல என் photo கொஞ்சம் பெருசா வந்த நேரம் அது. " நமக்கும் face value வந்துடுச்சு"நு மனசுக்கு உள்ள ஒரு கர்வம் லேசா எட்டி பார்த்துச்சு. திடீர்னு ஒருத்தன் posterல இருந்த என் photo மேல ரொம்ப சுதந்திரமா அவனோட அவசரத்தை இறக்கி கிட்டு இருந்தான். என் assistants எல்லாம் கோபம் ஆகி காரை விட்டு இறங்க பார்த்தாங்க. "அவனோட அவசரத்துல கூட எனக்கு பாடம் சொல்லி தர்ரான் டா. அ ந்த poster-ல வேற ஒருத்தனுடய photo இருந்து இருந்தா நீயும் நானும் சிரிச்சிட்டு தானே போய் இருப்போம்." - நு சொன்னேன்.


6. நான் திமிரோட தான் இருக்கேன். ஆனா ஒரு வித்தியாசம் என்னனா திமிர் என் ஆயுதம் இல்ல. அது என் கேடயம்

7.பூனை குறுக்கே போனா அபச குணம்னு ஒருத்தன் நினைச்சான்னா அது அவனுடைய தனிப்பட்ட விருப்பம், நம்பிக்கைனு விட்டுடுவேன். ஆனா, அம்மா விதவைங்கிரதால விசேஷங்கள் ஒதுக்கி வச்சா "அது அவனோட தனிப்பட்ட நம்பிக்கை"-னு என்னால விட முடியாது !

8.எவ்வளவு சிறந்த ஓட்டப்பந்தய வீரனாக இருந்தாலும் கால் தவறி விழுவது தவிரக்க முடியாதது. வெற்றியோ தோல்வியோ ஓர் இயக்கம் இருந்து கிட்டே இருக்கனும். நகருகிற அசைகிற எதைப் பார்த்தாலும் மனசுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அதனால தான் குளத்தை விட நதிக்கு அதிகமான கவிதைகளும் கதைகளும் இருக்கு.

9.வெற்றிங்கிறது அரண்மனை மாதிரி. அங்கே பத்திரமா இருக்கலாம். ஆனா, எதையும் கத்துக்க முடியாது. அடர்ந்து விரிந்து இருக்கிற காட்டுல தான் அனுபவங்கள் பசுமையா பூத்திருக்கும.

10. நிகழ் காலத்த்தை தவற விடாத மன நிலை இருக்கிற எல்லருமே ஞானி தான்.

11."இந்திரா காந்தியை சுட்டு கொன்னுட்டாங்க.. பால் வராது பேப்பர் வராது "- நு மொழி படத்துல வர்ற ஒரு வசனத்தை கேட்டுட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு பெண்மனி "ஒரு தலைவர் இற ந்துட்டா பால் கூட வராத உங்க ஊர்ல"-நு என்னை கேட்டாங்க .. அதுக்கு நான் "நீங்க சில வினாடிகள் ஆச்சரியப் படுகிற விஷயம், எங்களுக்கு நூற்றாண்டு கால வாழ்க்கை" - நு பதில் சொன்னேன்.


இந்த புத்தகத்தை முழுமையாக படிக்க விரும்புகிறவர்கள், vivek16@gmail.com-ங்கிர mail id-ku மெயில் அனுப்பவும்.




5 comments:

  1. Sangu Vathiyaar!!!!Unga post naalla iruku...congratzz

    ReplyDelete
  2. Thats philosophical...

    Cool.. he s really artistic by his approaching all the way..

    Good post.. keep it up machan..

    ReplyDelete
  3. super da...
    just try out wordpress.com
    awesome features for a blogger.
    it provides free account and multi language features.

    ReplyDelete
  4. oppanaiyil vazhum oruvar, vazhkayin oppanaigalai kizhithu kanbithirupathu paarututharkuriyathu!!!

    ReplyDelete
  5. It's really a different way of thinking of the usual things which we all mostly thing alike. Good to know the different thoughts and inspired to take life lively in a different manner.

    ReplyDelete