Thursday, March 8, 2012

My Wedding Invitation - U r invited!

"Friends,

It gives me immense pleasure in inviting you all for my wedding with....."

அப்படின்னு invitation-அ டைப் பண்ணும் போது ..

My room mate : "டேய் மச்சி, எழுந்திருடா, ஆபீஸ் போகலியா இன்னிக்கு "

Me : அடச்சே! இதுக்கு தான் டா தூங்குறதுக்கு முன்னாடி சரவணன் மீனாச்சி சீரியல் எல்லாம் பார்க்க கூடாது நு நெனைச்சிகிட்டு "Thanks machi" அப்டின்னு சொல்லி எழுந்தேன்.

சும்மா உட்கார்ந்து கிட்டு இருக்கிறவன் வாழ்க்கைல எல்லாம் தென்றல் வீசுது, புயல் மையம் கொள்ளுது! நம்ம full speed-ல fan  போட்டுட்டு பக்கத்துல போயி உட்கார்ந்தா  கூட காத்து வர மாட்டேங்குதே நு ஒரு feelings of india.


வாழ்கையில நான் கத்து கிட்ட 2  முக்கியமான பாடம் தான் என்னை marriage-ல ஒரு interest இல்லாம வச்சிருக்குன்னு நெனைக்கிறேன்.

Number 1: A mistake is a mistake only when repeated. ;

இயர்: 1997
திருவள்ளுவர் மேனிலை பள்ளி, குடியேற்றம்.
ஏழாம் வகுப்பு , ஆ பிரிவு.
திங்கள் கிழமை (ரொம்ப நல்லா ஞாபகம் இருக்கு) 


வழக்கம் போல சாயுங்காலம் home work  எழுதலாம் நு note book எடுத்தேன். 
என்னுடைய நெருங்கிய தோஸ்து(ரொம்ப நல்லவன்!) எங்க வீட்டுக்கு வந்து இருந்தான்.

தோஸ்து : என்ன மச்சி , என்ன எழுதுற ?

நான் : Geography homework  நாளைக்கு submit  பண்ணனும் ல , அது தான் எழுதலாம் நு எடுத்தேன் !

தோஸ்து : நீ எல்லாம் என்ன கிளாஸ் கவனிக்கிற ? வெள்ளி கிழமை submit  பண்ணினா போதும் நு miss சொன்னாங்களே , அதா நீ கவனிக்கலியா?

நான் : அட , அப்டியா ? அப்போ நாளைக்கு பொறுமையா எழுதலாமே ! 

தோஸ்து : அத தானே நானும் சொல்றேன் ! வா இப்போ book cricket விளையாடலாம் !

நான் : இதுக்கு தான் டா உன்னை மாதிரி விவரமா ஒரு friend  வேணுங்கிறது !

தோஸ்து : விட்ரா விட்ரா ! இதை எல்லாம் போயி பெருமையா பேசி கிட்டு !




மறு நாள் காலையில first  period - Geography  class :

டீச்சர் : Home work பண்ணாதவங்க எல்லாம் வெளிய போயி நில்லுங்க !

நான் (to  தோஸ்து)  :டேய் என்னடா, வெள்ளி கிழமை தான் submit  பண்ணனும் நு சொன்ன ! இப்போ , இன்னிக்கே கேக்குறாங்க !

தோஸ்து : (with  a  light-a ஒரு ஸ்மைல்), வெளிய போயி நின்னு கிட்டு ஜாலியா பேசலாம் வா

அப்புறம் , ரெண்டு கையிலயும் பிரம்பிலியே சுளீர் சுளீர் நு அடி விழுந்தது ! ஆனா, என் தோஸ்து ஹாப்பியா இருந்தான்


நான்: ஏன் டா இப்டி பண்ண ? நான் ஆவது homework எழுதி இருப்பேன் ல ?

தோஸ்து :அது ஒன்னும் இல்ல டா ! எனக்கு இன்னிக்கு தான் submit  பண்ணனும் நு நல்லா தெரியும் ! எனக்கு எழுதுற மூட் இல்ல! அப்புறம் நான் மட்டும் தனியா அடி வாங்கணும் ! நீ அப்புறம் கிண்டல் வேற பண்ணுவ! அது தான் ! இப்போ பாரு ! நீ என்ன கிண்டல் பண்ண முடியாது பாரு !

இன்று : 2012 
அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு ! முன்ன மாதிரியே ஜாலியா இருக்கிற மாதிரி நடிக்கிறான் ! "எப்ப மச்சான் உனக்கு கல்யாணம் ? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ டா ! வாழ்கை எவ்ளோ ஜாலியா இருக்கும் தெரியுமா ?" - நு அடிக்கடி missed கால் குடுத்து குடுத்து கேக்குறான் !

ஒரு சின்ன comparison  பண்ணி பார்த்தா

1997  தோஸ்து's நல்ல எண்ணம் = 2012  தோஸ்து's நல்ல எண்ணம் !

1997   7th  standard  home work advice   = 2012  Marriage advice

1997  பிரம்படி in both the hands + அவமானம் =  வாழ்கை முழுசும் அவமானம் + தர்ம அடி + ஊமை காயம்  + செலவு !

So, A mistake shouldn't be repeated. இப்போ இந்த மாதிரி வெளிய நின்னு அடி வாங்கி கிட்டு இருக்கிற நெறய நண்பர்கள் இப்படி தான் நான் மட்டும் கிளாஸ் உள்ள எப்டி ஜாலியா உட்காரலாம்னு மனம் நொந்து, வெந்து எனக்கு அட்வைஸ் பண்றாங்க நு புரியுது !

 
 Number 2: You must learn from the mistakes of others.

ஒருத்தர் ரெண்டு பேரு அப்டினா பரவ இல்ல நு சொல்லலாம் ! இத்தன பேரு தப்பு பண்ணி மாட்டிக்கும் போது , அது சுருக்கு நு , அது அவங்க பண்ற எவ்ளோ பெரிய mistake  நு புரியுது ! நான் கல்யாணத்த பத்தி தான் சொல்றேன்.
சரி, ஒரு வேளை, நம்ம தப்பா புரிஞ்சி கிட்டோமோ நு நெனைச்சி கிட்டு, சுமார் 10  பேரு கிட்டே ஒரு ரகசிய சர்வே எடுத்தேன் "மச்சி, இப்போ சாமி உன் முன்னாடி  வந்து உனக்கு marriage  ஆனது எல்லாம் போங்காட்டம்! செல்லாது செல்லாது ! நீ மறுபடியும் bachelor  பா  நு சொன்னா என்ன பண்ணுவ " நு கேட்டேன்! . பெரும்பாலான replies  இப்படி தான் வந்தது "ஒரு கிட்னியை வேணும்னாலும் எடுத்துக்குங்க சாமி ! நீங்க இப்போ சொன்னதை மட்டும் நிறைவேத்துங்க- நு சொல்லுவோம் மாப்ள" நு சொல்லும் போது பாதி பேருக்கு நான் kerchief குடுக்க வேண்டியதா போச்சு ! அந்த அளவுக்கு ஒரு emotions + பீலிங்க்ஸ் ! 

இது தான் lesson # 2
சரி , ஒரு வேளை வீட்ல நம்மள ரொம்ப force  பண்ணுவாங்களோநு நெனைச்சேன்  !


யாரோ ஒரு நலன் விரும்பி to  my  அப்பா : என்னங்க , எப்போ பையனுக்கு கல்யாணம்?

என் அப்பா : அய்யய்யோ, பெண் பாவம் பொல்லாததுங்க ! தெரிஞ்சே ஒரு பொண்ணு வாழ்கைய பாழாக்க  என் மனசாட்சி ஒத்து உழைக்கல !

இப்படி ஒரு producer  இருக்கிற வரைக்கும் ஒரு short பிலிம் கூட எடுக்க முடியாது நு ரொம்ப strong-a புரிஞ்சி போச்சு !

ஒரு வேளை , arranged marriage -நா தான் இப்டி எல்லாம் இருக்கும் போல, love marriage பண்ணோம்-ந இந்த பிரச்சனை எல்லாம் இல்லாம life smooth -அ இருக்கும் நு ஒரு முடிவுக்கு வந்தேன்



Me to my friend: மச்சி, ரொம்ப strong -அ decide  பண்ணிட்டேன் டா ! பண்ணா love பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கணும் நு முடிவு பண்ணிட்டேன் !

நல் உள்ளம் கொண்ட நண்பன் : அப்போ, கல்யாணம் பண்ணிக்கிற idea-ve இல்ல நு சொல்லு !


தம்பி படத்துல வர்ற மாதவன் மாதிரி ஹை pitchu -ல  "இப்போ நான் என்ன செய்ய ?" - நு பஞ்ச் டயலாக் மட்டும் தான் பேச முடியும் நு புரிஞ்சி கிட்டேன் ! 





14 comments:

  1. என்னை மிகவும் கவர்ந்த வரிகள்... "வாழ்கை முழுசும் அவமானம் + தர்ம அடி + ஊமை காயம் + செலவு !"

    எதார்த்தமான உண்மை.. :-)

    ReplyDelete
    Replies
    1. Machi Rajesh. Idha Deepthi - ku forward panraen iru!

      Delete
  2. oh my god....excellent article I kept laughing through out...

    ReplyDelete
  3. '' 1997 பிரம்படி in both the hands + அவமானம் = வாழ்கை முழுசும் அவமானம் + தர்ம அடி + ஊமை காயம் + செலவு ! ''

    - Machi, nee vaalkaila adi pada pada thaan munnuku varuvadaa.....

    ReplyDelete
    Replies
    1. Naan pinnadiye irundhuttu poraen machi. neeyum veliya ninnu adi vaangura boys kootam thaaney! adhuvum first veliya ponavan nee thaan mama!

      Delete
  4. romba nallaa irukku, punchaana timely humour sense.

    ReplyDelete
  5. அறிவோட comment-ல ஒரு வலி தெரியலை? anyways,coming back to the point, வாழ்கையல சில விஷயங்களை அனுபவிச்சு தான் ஆகணும். சந்தோஷம் மட்டுமே வாழ்கை இல்லங்கறதை நீ உணரனும்.. புரியுதா?

    ReplyDelete
    Replies
    1. Oli ji : arivu belongs to veliya ninnu adi vaangura boys koottam. Enakku ennavo, nee ippo veliya poradhukku kelambura madhiriyum ennai kai pidichi izhukkira madhiriyum thonudhu machi!

      Delete
  6. super mama... after such a long time un bloga ippo than padika mudinchuthu. Itha padichathum ne script eluthana namma skit than nyabagam vanthathu... ella postum arumai... keep eluthifying... Antha missed call nallavan yarunnu theriyum :D kalyanam ai innumada miss call kodukaran?

    ReplyDelete
  7. pasanga neengale ipdi ezhuthina, ponnunga pakkam pakkama ezhutha vendirukume!! enna polambi thallinalum, vithi valiaythu... seekaram sollu yaaru antha ponnu nu!!:P

    ReplyDelete