Friday, August 12, 2016

தெய்வமும் 200 மீட்டரும்

An interesting incident that happened in 2011.

Let us switch on the கொசுவர்த்தி in the anti-clockwise direction!

பெசன்ட் நகர் பீச்ல- நைட் 2 மணி வரைக்கும் நண்பன் E.கார்த்தி கூட மொக்கய்ய போட்டுட்டு, அவனோட புது i 10 எடுத்துட்டு ஊருக்கு கிளம்பினேன்.  ஒரே ஒரு சின்ன hint - கார்த்தி எப்பவும் 2 போன் வச்சிருப்பார். 1- personal ; 1 - office  சப்போர்ட் phone. இந்த information இப்போ எதுக்குன்னு புரியாது. வீட்ல போயி உட்கார்ந்து  யோசிச்சா மட்டும் தான் புரியும்.

என்னை பத்தி நல்லா தெரிஞ்சதால  385 times  கேட்டான் - "எப்படி போகணும்னு வழி தெரியுமா டா ?" ன்னு.

"மச்சான். நான் பார்த்துகிறேன். safe-ஆ போயி சேர்ந்துருவேன்."

அக்கறையரோட  அவன் சொன்னான் - "உனக்கு என்ன ஆனாலும் பரவா இல்ல. கார் மேல ஒரு சின்ன scratch கூட விழ கூடாது."


சரி என்று சொல்லி, ஒரு வழியாக எடுத்து சென்றேன்.


ஒரு வழியா, பெருங்களத்தூர் - மதுரவாயல் route -அ பிடிச்சிட்டன்.


ஏதோ ஒரு எடத்துல left-ல இறங்கணும்னு தெரியும். ஆனா, slight confusion -ல மிஸ் ஆகிடுச்சு. எங்கேயுமே , அடுத்து left turn வரவே இல்ல.

ஒரு வழியா, புழல் சென்று அடைந்தேன்.

அங்க 4 ஹிந்தி லாரி drivers இருந்தாங்க. அவங்க , ஏதோ வழி சொன்னாங்க. அந்த வழியில போனா ,  ஏதோ ஒரு சந்து வருது. அதுவும் முட்டு சந்து. எடு reverse-அ. சத்தியமா, நான் எங்கே இருக்கேன்-ங்கிற hint  கூட இல்ல. ஏதோ ஒரு mtc பஸ் போனது. எப்படியும் இது கோயம்பேடு போயிடும். அங்க இருந்து, வேலூர் போற bus பின்னாடியே போனா  ஊரு வந்துடும் னு follow  பண்னேன். என் நேரம் - அந்த பஸ் break down.

அங்க ஒரு மகான் இருந்தாரு. தெய்வீகக் கலை.

தெய்வத்திடம் வழி கேட்டேன்

தெய்வம் சொல்லியது - "இப்படியே போ மானிடா ! 200 metres -ல ஒரு bridge வரும். அது மேல ஏறினா, ஒரே straight -வேலூர் தான்."

தெய்வத்திடம் நன்றி சொல்லி கிளம்பிய பொழுது  "bridge  கிட்ட இறங்கி கிட்டுமா ?"- என்று தெய்வம் lift கேட்டது.

"இந்த உலகமே உன்னுடையது தெய்வமே! வா தெய்வமே!" என்றேன்.

"Late night-ல strangers -கு லிப்ட் கொடுக்கிறது எல்லாம் risk"என்று பிதற்றும் மானிடர்களுக்கு நான் கூறி கொள்ள விரும்புவது என்னவென்றால்  - "தெய்வம் என்னைய விட ரெம்ப டம்மி யாக இருந்தது. அதனால தான் அந்த lift-எ குடுத்தேன். Moreover, Night  time , அந்த bridge -கு பதிலா, நம்ம வேற பிரிட்ஜ் ஏறி - மகாராஷ்டிரா , கல்கத்தா -எங்கயாவது போயிட்டோம்-னு வைங்க. எதுக்கு ரிஸ்க் என்று தான் ஒப்புக் கொண்டேன்."


பிரிட்ஜ் சென்று அடைந்தேன். தெய்வம் - இறங்கியது. "இந்த பிரிட்ஜ் தானே? வேலூர் போவும் -ல.. வேலூர். வேலூர் ?" என்று, கோர்ட் தவாரி போல் மூன்று முறை கேட்டு, பிரிட்ஜ் ஏறினேன். "வேலூர் - 180 km"- என்று sign போர்டு பார்த்தவுடன் தெய்வத்துக்கு மனதுக்குள் நன்றி சொன்னேன்.

பாதி தூரம் கடந்து சென்ற பின் , செல் போன் ஒலித்தது. கார்த்தி, தனது ஆபீஸ் சப்போர்ட் போன்-ஐ காரிலியே  தவற விட்டு இருக்கிறார்.

வண்டியா ஓரமா பார்க் பண்ணிட்டு , போன் attend பண்ணி - "Sir, கார்த்திக் has left his phone in the car. I will ask him to give you a call back"- என்று கூறி கட் பண்ணிட்டேன்.




திரும்பவும் இன்னொரு அழைப்பு. எதுக்கு கார்த்தியோட ஆபீஸ் phone -ஐ நாம் அட்டென்ட் பண்ணனும் என்று யோசித்து  silent -ல போட்டுட்டு வீட்டுக்கு போயிட்டேன்.

என்னை விட தன் கார் மீது கொண்டு இருந்த அக்கறையால், கார்த்தி அழைத்தார். "டேய், கார் correct -ஆ உன்னை கொண்டு வீட்டுல சேர்த்துடுச்சா ?"

கார் கொடுத்த  அடிமை கார்த்தியிடம் ஆணவமாய் பேசினேன்   - "சிக்னல் சரியா இல்ல. 10 வருஷம்  கழிச்சி பேசுறேன். By the by, உன் ஆபீஸ் போன் என் கிட்ட தான் இருக்கு. ஒரு நம்பர்-ல இருந்து close டு 25 calls வந்து miss ஆகி இருக்கு.  மேனேஜர் யாராச்சும் கால் பண்ணின்னா, colorful words-ல  தான்  reply பண்ணுவேன். புரியுதா?  ".


கார்த்தி : "டேய். என் ரெண்டு phone -உம் என் கிட்ட தான் இருக்கு. நீ கண்ணாடி போட்டு பாரு. அது உன் phone -ஆ இருக்கு போகுது!"

கண் பார்வை அந்த அளவுக்கு மோசம் ஆகலியே-ன்னு நெனைச்சி எடுத்து பார்க்குறேன்.  அது என் phone இல்லையே  என்று பார்க்கும் பொது திரும்ப அந்த number-ல இருந்து கால் வருது.

Attend பண்ணினேன்.

நான் : ஹலோ

எதிர் முனை  : சார்

(எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே!)

நான் : சொல்லுங்க

எதிர் முனை  : நான், இன்னிக்கு காலைல உங்க கார்ல lift  கேட்டு வந்தேன்.

நான் : (அட... நம்ம தெய்வம். ) சொல்லுங்க.

எதிர் முனை  : phone உங்க கார்-ல மிஸ் ஆகிடுச்சு.

நான் : சூப்பர் !!!! சொல்லுங்க சார்!

தெய்வம்  : (அதீத நக்கலுடன் )அதுல முக்கியமான நம்பர் எல்லாம் இருக்குது. நான் ஒரு real எஸ்டேட் ஏஜென்ட். சீக்கிரமா எடுத்துட்டு வந்து சென்னைல குடுக்க பாருங்க. நெறய வேலை இருக்கு.

நான் : ஓ , அப்படியா ? எனக்கு, அடுத்த 20 வருஷத்துக்கு  சென்னை வர்ற வேலையே இல்லையே !

தெய்வம்  : சார் , please  சார். நான் வேணும்னா உங்க ஊருக்கு வரவா ?

நான் : வாங்க. but , நான் கொஞ்சம் busy -ஆ தூங்கி கிட்டு இருப்பேன். இருந்தாலும் try பன்ரேன்.

ஊருக்கு எப்படி வர வேண்டும் என்றும் வழி சொன்னேன். தெய்வம் எனக்கு வழி சொல்லுச்சு. நான் இப்போ தெய்வத்துக்கு வழி சொல்லிட்டேன். Draw the match.

நான் : அப்புறம், எங்க வீடு, ஒரு interior village -ல இருக்கு. நான் வரணும்-னா ஒரு Rs .100 செலவு ஆகவும். பரவா இல்லியா ?

(பஸ் stand -இல் இருந்து மிஞ்சி போனால், 100 metre தொலைவில் என் இல்லம்)

தெய்வம்  : கண்டிப்பா சார். போன் மட்டும் குடுத்துடுங்க ப்ளீஸ்.

நான் : நீ வந்துட்டு call பண்ணு தெய்வமே. நான் வர்ரேன்


மதிய நேரம்.

அதே எண்ணில் இருந்து அழைப்பு.

நான் :இதோ வந்துட்டேன் தெய்வமே. நீ பஸ் stand -லியே waitees பண்ணு"

போன் எடுத்துட்டு போனேன். தெய்வத்துக்கு என்னை அடையாளம் தெரியல. ரொம்ப பாவமா இருந்துச்சு. பக்கத்துலேயே 10 நிமிஷம் நின்னேன். தெய்வம் என்னை யாரோ மாதிரி பார்த்துச்சு.

நான் : "சார், உங்க போன்"

தெய்வம் கண் கலங்கி, "ரொம்ப thanks' - என்று கூறி  Rs.50-ஐ எடுத்து கொடுத்து  - "இவ்ளோ தான் சார் இருக்கு" என்றார்.

"விளையாட்டுக்கு சொன்னேன். வச்சிக்கோங்க"- என்று கூறி,

தெய்வம், "ஒரு 200 metre நடக்கிறதுக்கு சோம்பேறி தனம் பட்டு 350Kms சுத்துறன் சார் காலையில இருந்து." என்று மிகவும் பாவமாக கூறியது.

நான் : விடுங்க சார் பரவா இல்ல. இங்க நிக்காதீங்க. ஒரு சில bus தான் இங்க நிக்கும். அந்த இடத்துல தான் எல்லா bus-உம் நிக்கும். வாங்க, நான் drop பண்றேன்-னு சொல்லி வண்டியில் ஏற சொன்னேன்.

தலைக்கு மேல் கைகளை கூப்பியவாறு "வேண்டாம்"-என்று தலையை ஆட்டி செய்கை செய்து   பதில் ஏதும் கூறாமல் கண் கலங்கி  சென்றது தெய்வம்.

1 comment:

  1. விவேக் ராஜா, நல்லா எழுதுறீங்க!.
    தொடர்ந்து எழுத... வாழ்த்துக்கள்!.

    ReplyDelete