Monday, March 5, 2012

700 ஆண்களுக்கு நடுவே சிக்கி தவித்த இளம்பெண்!

Date & Time : Sometime during the golden days in Crescent Hostel.


என் காலேஜ்-அ பத்தி அதிகம் தெரியாதவங்களுக்கு ஒரே ஒரு வரியில அறிமுகம்  : வண்டலூர் zoo - க்கு அப்டியே பக்கத்துல ! 

இதுக்காக நான் காலேஜ் சேர்ந்த உடனே " உன் friends- இருக்கிற இடத்துக்கே போயிட்டியா?" - நு மொக்க காமெடி பண்ணவன் எச்சகச்சம் ! :) 

வழக்கம் போல எந்த வெட்டி வேலையும் இல்லாம சாயுங்காலம் ஒரு 7  மணிக்கு ஒரு நியூஸ் !

"மாப்ள ! கொஞ்சம் தூரம் தள்ளி இருக்கிற   septic tank-la முதலை இருக்கிறத நம்ம மோட்டார் operator பார்தானம் டா!" - நு ஒருத்தன் வந்து சொன்னான்.

நாம தான் வதந்திய கேட்ட உடனே கந்து வட்டிக்கு கடன் வாங்கிட்டு போயாவது ஸ்பாட்-கு போயிடுவோமே! 

போயி அங்கே ரொம்ப நேரம் நின்னு பார்த்தோம் ! Fire engine ஆபீஸ்-ல இருந்து suction பம்ப் எல்லாம் போட்டு வெளிய எடுத்து பார்த்தப்ப ஒரு குட்டி முதல உள்ள இருந்தது! - அது எப்படி வந்தது, ஏன் வந்தது-ங்கிரத எல்லாம் "குற்றம் - நடந்தது என்ன?"-ல கோபிநாத் கோட்டு சூட்டு எல்லாம் போட்டுகினு வந்து செம modulation -ல  சொல்லுவாரு!  வனத்துறை அதிகாரிகள் அத அப்டியே  கேட்ச் பண்ணி கொண்டு போயிட்டாங்க! - இது தாங்க நடந்தது!


மறு நாள், காலையில newspaper படிக்கலாம் நு எடுக்கிறேன்!

மூணாவது பக்கத்தில ஒரு செய்தி :

"700 ஆண்களுக்கு நடுவே சிக்கி தவித்த இளம்பெண்! - போலீசார் வந்து போராடி மீட்டனர்"  - 


செமையா இருக்கே news அப்படினு படிக்க ஆரம்பிச்சேன். அது என்னடா நியூஸ் -நு படிச்சா exactly the முதலை நியூஸ். 
ஒரே ஒரு கேட்ச். Capture  ஆனா முதலை, பெண் முதலையாமாம் !  
பாய்ஸ் hostel  total strength ஒரு 700  இருக்கும். எப்படியெல்லாம் கோர்த்து இப்படி ஒரு டைட்டில் !

அட்ரா சக்க! அட்ரா சக்க! - நு சொல்லிட்டு "என்ன ஒரு விளம்பர யுக்தி" - நு நெனைச்சிக்கிட்டேன் ! இப்படி தான் நாட்டுல பாதி நியூஸ் ஓடி கிட்டு இருக்கு! 

மீடியா அரசியல்-ல எவ்ளோ பெரிய ரோல் ப்ளே பண்ணுது-நு தெரிஞ்சிக்க சுஜாதா அவர்கள் எழுதிய "பதவிக்காக"-ங்கிற extra-ordinarily fantastic book-அ படிக்கலாம் !

வைரமுத்து  அவர்களின் தமிழுக்கு நிறம் உண்டு" -என்கிற புத்தகத்தில்  "பத்திரிக்கை சுதந்திரம்" என்ற தலைப்பில்  ஒரு சின்ன வாசகம் நினைவுக்கு வருகிறது !
 
"நடிகை வீட்டில் இருக்கும்
நான்கு நாய்களில் மூன்று நாய்கள் கர்ப்பம் 
என முன்னணி   செய்தி தாளில் செய்தி வந்தது! 
விசாரித்து பார்த்ததில் தான் தெரிந்தது அவை 
அனைத்துமே ஆண் நாய்கள் என்று !"





3 comments: